காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றேஉனை மிதிக்கிறேன் - அட
வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன் - நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமையெண்ணித் துதிக்கிறேன்--ஆதி
மூலாவென்று கதறிய யானையைக் காக்கவே -- நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ? கெட்ட மூடனே - அட (காலா)
ஆலால முண்டவ னடிசர ணென்ற மார்க்கண்டன் -தன
தாவி கவரப்போய் நீபட்ட பாட்டினை யறிகுவேன் - இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல் உன்னை விதிக்கிறேன் - ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன் -அட (காலா)
- மஹாகவி பாரதியார்
காலனை பார்த்து பாரதி சிறிதும் பயமின்றி:
காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றேஉனை மிதிக்கிறேன் -- அட
அடே! காலனே, மரணம் பற்றிய பயமேதும் இல்லாத எனக்கு நீ சிறிய புல்லை போன்றவன் தான், என்னுடைய கால் அருகே வா டா, உன்னை உதைத்து பந்தாடிப் பார்க்கிறேன் காலனே வா.
வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன் -- நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமையெண்ணித் துதிக்கிறேன்--ஆதி
வேல் கொண்டு நிற்கும் என் அப்பன் முருகனின் துணையை என் மனதினில் வைத்திருக்கிறேன் அது எனக்கு காவலாய் எப்பொழுதும் நிற்கும், நல்ல கருத்துகளையும், தெளிவுகளையும் எமக்கும், நாட்டிற்கும் உரைத்த நல்ல ஞானிகளை எண்ணி போற்றுகிறேன்.
மூலாவென்று கதறிய யானையைக் காக்கவே -- நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ? கெட்ட மூடனே -- அட (காலா)
எம்பெருமானை பூஜித்து வந்த யானையை முதலை வேடம் பூண்டு தாக்க முற்பட்ட போது, ஆதி மூலா என கதறிய யானையை காப்பாற்ற எம் பெருமான் செய்த லீலை மறந்தாயோ? மூடா காலனே வாடா மீண்டுமொரு முறை அவன் பக்தனை சோதித்து பார்க்க தைரியமிருந்தால் வாடா.
ஆலால முண்டவ னடிசர ணென்ற மார்க்கண்டன் --தன
தாவி கவரப்போய் நீபட்ட பாட்டினை யறிகுவேன் -- இங்கு
ஆலகால விஷமுண்ட சர்வேஸ்வரன் அடி சரணமென்று அவன் தாள் பணிந்த மார்க்கண்டேயனை கவர நீ முயற்சித்து நீ பட்ட பாட்டினை மறந்தாயோ? ஆனால் அதனை நான் நன்றாக அறிவேன்.
நாலாயிரம் காதம் விட்டகல் உன்னை விதிக்கிறேன் - ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன் -- அட (காலா)
இங்கிருந்து நாலாயிரம் காதம் (காதம் - கூப்பிடும் தூரம்) விட்ட கல்லானது உன்னை வந்தடையுமாறு சபிக்கிறேன். எல்லாம் வல்ல ஹரி நாராயணனாக ரூபம் கொண்டு உன் முன் வந்து நிற்பேன். காலனே வா டா.
இந்த கவியானது, பாரதிக்கு மரணம் மீது எத்தகைய பயமும் இல்லாமல் இருந்ததை காட்டுகிறது.
காலா நின்னை எச்சரிக்கிறேன் -அழகாலனாய்
பதிலளிநீக்குகாலா நின்னை எச்சரிக்கிறேன்- அழி முதல்வனாய்
காலா நின்னை எச்சரிக்கிறேன்- காளி தேவியாய்..
தீண்டும் எண்ணம் தோன்றுமோ ???
தோன்றின் என்னை தீண்டுமோ ???